sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்க ஆய்வு

/

நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்க ஆய்வு

நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்க ஆய்வு

நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்க ஆய்வு


ADDED : ஜன 03, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், ஜன. 3-

நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலுக்கு, தார் சாலை அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே, நைனாமலையில் மலை உச்சியில், 2,700 அடி உயரத்தில் வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 3,600 படிக்கட்டுக்கள் உள்ளதால், பெரும்பாலான பக்தர்கள் புரட்டாசி விரத நாட்களில் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, மலைக்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் உள்ள கோவில் வரை சாலை அமைக்க சுற்றுலாத்துறை மூலம், 13.06 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மண் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது.

இதை தொடர்ந்து, மலைக்கு செல்ல தார் சாலை அமைக்கும் பணிக்காக, சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலம், ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. இதை‍யொட்டி, நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்க முன்னேற்பாடு மற்றும் முடிவுற்ற மண் சாலை பணியை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, சாலையில் தடுப்பு சுவர்கள், பாலங்கள் கட்டுவது குறித்தும், மண் மாதிரி எடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர்

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us