sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்காச்சோள பரப்பை அதிகரிக்க மானியத்தில் விதைகள் விற்பனை

/

மக்காச்சோள பரப்பை அதிகரிக்க மானியத்தில் விதைகள் விற்பனை

மக்காச்சோள பரப்பை அதிகரிக்க மானியத்தில் விதைகள் விற்பனை

மக்காச்சோள பரப்பை அதிகரிக்க மானியத்தில் விதைகள் விற்பனை


ADDED : ஆக 03, 2025 12:45 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'மக்காச்சோள பரப்பளவை அதிகரிக்கும் வகையில், வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது' என, நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் வட்டாரத்தில், பிரதானமாக நிலக்கடலை, சோளம் சாகுபடி செய்யும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இதன் தேவை அதிகரிப்பு காரணமாக, சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, எத்தனால் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மக்காச்சோளத்தின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், மத்திய, மாநில அரசுகளின் வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2024 முதல், இப்பயிர் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதற்கு ஏற்ப, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் அதிக மகசூல் கிடைப்பதோடு, அதிக விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

சிறப்பு வாய்ந்த மக்காச்சோளப்பயிர், இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கும் ஏற்றதாக உள்ளதால், சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருட்கள் அடங்கிய, 6,000 ரூபாய் மதிப்புள்ள தொகுப்பு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், தங்கள் பகுதியிலுள்ள உதவி வேளாண் அலுவலர்களை அணுகி முன் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us