/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த ஆலோசனை, ஆட்சேபனைக்கு வரவேற்பு
/
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த ஆலோசனை, ஆட்சேபனைக்கு வரவேற்பு
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த ஆலோசனை, ஆட்சேபனைக்கு வரவேற்பு
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த ஆலோசனை, ஆட்சேபனைக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 25, 2025 01:01 AM
ராசிபுரம், :ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்த ஆலோசனை, ஆட்சேபனை கருத்து தெரிவிக்க, நகாட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தொடக்கத்தில் இருந்து, அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., - தே.மு.தி.க., பா.ஜ., வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராசிபுரம் பஸ்நிலைய மீட்பு குழுவினர் என்ற பெயரில், கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டை மாற்றக்கூடாது என, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாவட்ட கலெக்டரின் நேரடி விசாரணைக்கு பிறகு, ராசிபுரம் (பொறுப்பு) கமிஷனர் கோகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ராசிபுரம் நகராட்சியில் இருந்து அணைப்பாளையம் கிராமத்தில், 7.03 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் செய்யப்பட்ட நாளில் இருந்து, 5 நாட்களுக்குள், அதாவது, 28ம் தேதிக்குள் தங்களுடைய கருத்துகளை எழுத்து பூர்வமாக நகராட்சி அலுவலகம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.