/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்
/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : மே 03, 2024 07:23 AM
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் கணபதி வரவேற்றார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழ்நாட்டின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்திட வேண்டும். பெருந்தொற்று காலத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பூதிய உரிமையை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு, ஒன்றிய, நகராட்சி பணிமூப்பின்படி பதவி உயர்வு ஆணை வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் பொது பட்டியலில் இருந்து, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மதிப்புறு தலைவர் ஆசைத்தம்பி, மாநில சொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.