/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
/
தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 28, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில், மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது மெத்தன போக்கு காட்டுவதை கண்டித்து, தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார்.
அதில், புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டுவதாகவும்; வன்கொடுமை வழக்குகளில் மெத்தன போக்கு கையாள்வதாகவும்; அதை கண்டும் காணாமல் செயல்படக்கூடிய மாவட்ட போலீஸ் துறையை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.

