/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நடப்பாண்டு ரூ.21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
/
நடப்பாண்டு ரூ.21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
நடப்பாண்டு ரூ.21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
நடப்பாண்டு ரூ.21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
ADDED : ஜூலை 26, 2025 01:32 AM
நாமக்கல், ''மாவட்டத்தில், முன்னோடி வங்கி சார்பில், நடப்பாண்டிற்கு, 21,933.58 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி கூறினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம், 21,933.58 கோடி ரூபாய் அளவிற்கு, கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு, 2025-26ம் ஆண்டுக்கு, விவசாயிகளுக்கு பயிர் கடனாக, 14,296.78 கோடி ரூபாய், சிறு, குறு நடுத்தர தொழில் கடன், 6,916.25 கோடி ரூபாய், கல்வி கடனாக, 45.4 கோடி ரூபாய், வீட்டு கடனாக, 141.74 கோடி ரூபாய் மற்றும் இதர கடன்களுக்கு, 381.08 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2024-25-ம் ஆண்டில், 19,956.23 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 18,002 கோடி ரூபாய் எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில், 3,931.02 கோடி ரூபாய் (21.87 சதவீதம்) அதிகமாக கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது, மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து, வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மலர்விழி, ரிசர்வ் வங்கி பிரதிநிதி விவேக் ஆனந்த், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுபாஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா உள்பட பலர் பங்கேற்றனர்.