ADDED : ஏப் 30, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாளை, மே தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அன்றைய தினம், 'இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்களை மூட வேண்டும்' என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும்.
அரசு உத்தரவை மீறி, விற்பனை செய்தாலோ, திறந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

