sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

/

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை


ADDED : ஜன 30, 2025 05:07 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழ-கத்திலும் சம்பளம் வழங்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின், பள்ளிக்கல்வித்துறையில் மேல்நிலை வகுப்புகளை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களில், 2009 ஜூன், 1க்கு பின், பணியில் சேர்ந்த, முதுகலை ஆசிரியர்கள் பெரிதும் சம்பள முரண்பாடுக-ளோடு பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, 2009 ஜூன், 1க்கு முன் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களை விட இவர்கள் ஒவ்வொரு மாதமும், 14,000 ரூபாய் குறைவாக சம்பளம் பெறு-கின்றனர். இது சார்ந்து ஏற்கனவே தமிழக முதல்வருக்கும், பள்-ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.

தமிழக முதல்வர், இது குறித்து நடவடிக்கை எடுத்து, முதுகலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும். 1978ல் முதுகலை ஆசிரியர்களின் சம்பளத்திற்கும், கல்லுாரி விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கும், 3.7 சதவீதம் மட்-டுமே வித்தியாசம் இருந்தது. தற்போது, 53.2 சதவீதத்தை தாண்டி உள்ளது. மேலும், தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர்கள், 6 முதல், பத்தாம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களைவிட குறைவான சம்பளம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், இதுகு-றித்து நடவடிக்கை எடுத்து, மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்க-ளுக்கு இணையாக, தமிழகத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான பேச்சுவார்த்தையை, முது-கலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உடனடியாக நடத்த வேண்டும்.இவ்-வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us