sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெப்பம் 102 டிகிரிக்கும் அதிகமாகும்

/

வெப்பம் 102 டிகிரிக்கும் அதிகமாகும்

வெப்பம் 102 டிகிரிக்கும் அதிகமாகும்

வெப்பம் 102 டிகிரிக்கும் அதிகமாகும்


ADDED : ஏப் 03, 2024 07:44 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த, 5 நாட்களில் வெயில் அதிகரிக்கும், வெப்பநிலை, 102 டிகிரியை தாண்டும் என, வானிலை ஆலோசனை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் நிலவியது. இன்று (3) முதல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை, 102.2 டிகிரி வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 20 முதல், 70 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல், 10 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

கறவை மாடுகள் அதிக வெப்பநிலை காரணமாக அயற்சிக்கு ஆளாகின்றன. வெயில் நேரங்களில் கால்நடைகளை மேய விடக்கூடாது. குளிர்ந்த நேரங்களில், கறவை மாடுகளுக்கு போதுமான அளவு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு, 100 கிராம் அளவு மாவுச்சத்து பொருட்களான மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற தானியங்களை அரைத்து கலப்பு தீவனத்துடன் கலந்து கொடுப்பதால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவை அதிகரிக்க முடியும். நாள் முழுவதும் தரமான குடிநீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். வெயில் நேரங்களில் கறவை மாடுகளின் மேல் தண்ணீர் தெளிக்கலாம். நல்ல காற்றோட்டமுள்ள மர நிழலில் கட்டுவது வெயிலினால் ஏற்படும் அயற்சியை குறைக்க உதவும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us