/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'
/
'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'
'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'
'நுாறு நாள் வேலை திட்டத்தை பழைய வடிவில் அமல்படுத்தணும்'
ADDED : ஜன 27, 2026 05:51 AM
மோகனுார்: கிழக்கு மாவட்ட காங்., சார்பில், நாட்டின், 77வது குடியரசு தின விழா, மோகனுாரில் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்.,ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்து, மகாத்மாகாந்தி, காமராஜர், இந்திரா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மாரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சித்திக், மோகனுார் டவுன் பஞ்., காங்., தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் அருணகிரி, மோகநாதன், நவலடி, மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மோகனுார் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுடன், மாவட்ட தலைவர் செந்தில் கலந்துரையாடினார்.
இதையடுத்து, குமரிபாளையம் கிராம பஞ்.,ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாகவும், பழைய வடிவிலேயே மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்தை அதிகாரிகளிடம் வழங்கினார்.

