sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

1.50 லட்சம் மின் இணைப்புகளை உடனே வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

/

1.50 லட்சம் மின் இணைப்புகளை உடனே வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

1.50 லட்சம் மின் இணைப்புகளை உடனே வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

1.50 லட்சம் மின் இணைப்புகளை உடனே வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்


ADDED : நவ 11, 2024 08:07 AM

Google News

ADDED : நவ 11, 2024 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'தமிழகத்தில் காத்திருப்பில் உள்ள, 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும்' என, நாமக்கல்லில் நடந்த பாரதிய கிசான் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்லில், நேற்று நடந்த பாரதிய கிசான் சங்க மாவட்ட மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். அகில பாரத துணைத்தலைவர் பெருமாள் பங்கேற்றார். அவர் பேசுகையில், ''பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட மாநாடு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. முதல் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடந்துள்ளது. மாநில மாநாடு விரைவில் மதுரையில் நடக்க உள்ளது. அகில பாரத மாநாடு, குஜராத் மாநிலத்தில் பிப்., 19, 20, 21ல் நடக்க உள்ளது. மின் இணைப்பு கேட்டு, 1.50 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். காத்திருப்பில் உள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும். திருமணிமுத்தாறு காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கொல்லிமலையில் மூலிகை மருத்துவ பயிர்களை பயிரிடுவதற்கான பயிற்சிகளை பழங்குடியின மக்களுக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us