sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து

/

பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து

பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து

பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து


ADDED : பிப் 21, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததால், ராசிபுரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், அவரது மகன்களுக்கு அடி, உதை விழுந்தது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, 24வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கலைமணி, 54. இவரது மகன்கள் ஸ்ரீராம், 35, லோகசரவணன், 34. கோனேரிப்பட்டியில் வசிக்கின்றனர்.

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில், டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் ராஜா, 45. இவரிடம், கலைமணி, லோகசரவணன் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பாரிலேயே லோகசரவணன், ராஜாவிற்கு தகராறு ஏற்பட்டது.

மாமூல் கொடுக்காததால் ஆத்திரமடைந்த லோகசரவணன், முறைகேடாக பார் நடத்துவதாக பல்வேறு துறைகளுக்கு புகார் அனுப்பினார்.

இது குறித்து, ராஜா, அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் இரவு கலைமணி வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர்.

இதில், இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. கவுன்சிலர், அவரது மகன்களை, ராஜா தரப்பினர் தாக்கியுள்ளனர். காயமடைந்த கலைமணி, அவரது மகன்கள் மற்றும் இருவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு சேர்ந்த இடத்திலும், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

முதலுதவிக்கு பின், தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, கலைமணி அங்கிருந்து சென்றுள்ளார். ராசிபுரம் போலீசார் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.

இரு தரப்பினர் புகாரில், லோகசரவணன், ராஜா ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர் கலைமணி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்குவது, அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பிரச்னைக்கு பஞ்சமில்லாதவர்


தி.மு.க., கவுன்சிலர் கலைமணி தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வருகிறார். ராசிபுரம் நகராட்சிக்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் கோரி, தி.மு.க., நகர செயலர் சங்கர் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற கலைமணி, சில நாட்களில், எதிர்தரப்பு சார்பில் நடந்த பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு போராட்டத்திலும் பங்கேற்றார். அடுத்த சில நாட்களுக்கு பின், நகராட்சி அலுவலகத்தில் சங்கர் சண்டையிட்டதால், மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். பின்னர், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். சில மாதங்கள் கழித்து, நகராட்சி சேர்மன் கவிதாவுடன் சேர்ந்து, சமூக போராளிகள் என்ற பெயரில் பல அமைப்புகள் நகராட்சி நிர்வாகத்தை மிரட்டி வருவதாக கூறினார். தற்போது பார் மாமூல் தகராறில் தாக்கப்பட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us