sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் கட்டுக்குள் வந்த காட்டு தீ 25 ஹெக்டேரில் மரங்கள் எரிந்து சாம்பல்

/

கொல்லிமலையில் கட்டுக்குள் வந்த காட்டு தீ 25 ஹெக்டேரில் மரங்கள் எரிந்து சாம்பல்

கொல்லிமலையில் கட்டுக்குள் வந்த காட்டு தீ 25 ஹெக்டேரில் மரங்கள் எரிந்து சாம்பல்

கொல்லிமலையில் கட்டுக்குள் வந்த காட்டு தீ 25 ஹெக்டேரில் மரங்கள் எரிந்து சாம்பல்


ADDED : மார் 29, 2024 01:20 AM

Google News

ADDED : மார் 29, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்:கொல்லிமலை கொண்டை ஊசி மலைப்பாதையில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 25 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.

கொல்லிமலை, கொண்டை ஊசி மலைப்பாதையில், கடந்த, 4 நாட்களாக மூங்கில் மரங்கள் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தன. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறை, தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், கொளுத்தும் வெயிலால், தொடர்ந்து காட்டு தீ பரவி வந்தது. இதனால், மலைப்பாதையில் கடும் புகை மூட்டம் காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும், வனத்துறை அலுவலர் கலாநிதி தலைமையில், தொடர்ந்து தீ தடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு, நேற்று காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறியதாவது: கடந்த, 4 நாட்களாக, கொல்லிமலை கொண்டை ஊசி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தற்போது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் புகைந்து கொண்டுள்ளது. அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர். இந்த காட்டுத்தீயால், 25 ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலாகின.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us