/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் தேர் விழாபூச்சாட்டுதலுடன் தொடங்கியது
/
மாரியம்மன் கோவில் தேர் விழாபூச்சாட்டுதலுடன் தொடங்கியது
மாரியம்மன் கோவில் தேர் விழாபூச்சாட்டுதலுடன் தொடங்கியது
மாரியம்மன் கோவில் தேர் விழாபூச்சாட்டுதலுடன் தொடங்கியது
ADDED : ஏப் 23, 2025 01:46 AM
நாமகிரிப்பேட்டை,:நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் விழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி வாரம், தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு தேர் திருவிழா மே 8ம் தேதி நடக்கவுள்ளது. முன்னதாக நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
அம்மனுக்கு பூசாரிகள் மற்றும் பக்தர்கள் வரிசையாக பூக்களை தூவி பண்டிகையை தொடங்கி வைத்தனர். 100 கிலோ எடையுள்ள அரளி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களை துாவினர். கர்ப்பகிரகம் முழுவதும் பூக்களால் நிரம்பியது.
நாளை இரவு கம்பம் நடும் விழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தினர் பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து அபிேஷகம் செய்வதுடன், சுவாமியை அலங்கரித்து வீதி உலா எடுத்து செல்வர்.
மே, 7ம் தேதி காலை தீ மிதி விழா, மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி மஞ்சள் நீராடல் விழாவுடன் தேர்திருவிழா முடிவடைகிறது.

