/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்து ரூ.56 லட்சத்துக்கு ஏலம்
/
வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்து ரூ.56 லட்சத்துக்கு ஏலம்
வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்து ரூ.56 லட்சத்துக்கு ஏலம்
வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்து ரூ.56 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஏப் 01, 2024 03:32 AM
ப.வேலுார்: ப.வேலுார், பிலிக்கல்பாளையம் ஏல மண்டியில் வெளியூர் வியாபாரிகள் ஏலம் எடுக்க அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்து, 56 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல மார்க்கெட்டில், சனி, புதன் கிழமைகளில் விற்பனை செய்கின்றனர். இங்குள்ள, 13 வெல்ல மண்டியில் ஏலம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில், தமிழகத்தின் பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்வடைந்தது.
கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,260 ரூபாய்-க்கும், அச்சுவெல்லம், 1,270 -ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,300 ரூபாய்-க்கும், அச்சுவெல்லம் ஒரு சிப்பம், 1,310 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம், 3,300 சிப்பங்களும், அச்சு வெல்லம், 1,000 சிப்பங்களும் ஏலத்திற்கு வந்திருந்தது. மொத்தம், 56 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில், வெல்லம் விலை உயர்வால், கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

