/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
/
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
ADDED : டிச 02, 2024 02:51 AM
ராசிபுரம்: வங்க கடலில் உருவான புயல் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, வெண்ணந்துார், மங்களபுரம், பேளுக்குறிச்சி, பட்-டணம், அணைப்பாளையம், முத்துக்காளிப்பட்டி உள்ளிட்ட பகு-திகளில், நேற்று முன்தினம் காலை முதல் துாறல் மழை பெய்து வந்தது.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியில் இருந்து, நேற்று காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால், சாலை-யோரம் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.தொடர் மழை காரணமாக, இரண்டு நாட்களாக குளிரும் அதிகரித்-துள்ளது. நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட், அரசு பள்ளி மாண-வியர் விடுதி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளிட்ட பகுதி-களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் போக்கு-வரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், வளர்ந்துள்ள சோளத்தட்-டுகள் மழைக்கு சாய்ந்து விட்டன. பல இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது. நேற்று காலை நிலவரப்படி ராசிபு-ரத்தில், 65 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் கொல்லிமலைக்கு அடுத்து ராசிபுரத்தில் தான் அதிக மழை பெய்-துள்ளது குறிப்பிடத்தக்கது.