ADDED : ஜூன் 23, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெட்டுக்காட்டு புதுாரில் உள்ள சிவகாமி தாயார் உடனாகிய ஆனந்த தில்லை நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கணபதி வழிபாட்டுடன், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு திருவி-ளக்கு பூஜை வழிபாடு நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு சிவகாமி தாயார் உடனாகிய ஆனந்த தில்லை நடராஜர் பெருமா-ளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சிவகாமி தாயா-ருக்கும், பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பஞ்-சாமிர்தம், திருநீறு போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில் திருக்கயிலாய வாத்தியத்துடன் சுவாமி திரு-வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.