/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
/
கருமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : ஏப் 30, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம், காந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத திருவிழா,
கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ
மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

