sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

/

மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு


ADDED : ஜூலை 19, 2025 01:29 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:'நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல், 23 வரை, நான்கு நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, இரண்டு நாட்களாக சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்துள்ளது. நாளை முதல், 23 வரை, நான்கு நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 31 முதல், 34 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 22 டிகிரி முதல், 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 60 முதல், 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 14 முதல், 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். நாளை, 6 மி.மீ., 21ல் 14 மி.மீ., 22ல் 7 மி.மீ., 23ல், 7 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரம், சில பண்ணைகளில் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கத்தால் கோழிகள் இறந்துள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us