sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கெடமலையில் பாறைகள் உருண்டதால் பரபரப்பு

/

கெடமலையில் பாறைகள் உருண்டதால் பரபரப்பு

கெடமலையில் பாறைகள் உருண்டதால் பரபரப்பு

கெடமலையில் பாறைகள் உருண்டதால் பரபரப்பு


ADDED : ஆக 12, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த போதமலையில் கீழூர், மேலுார், கெடமலை என, மூன்று மலைக்கிராமங்கள் உள்ளன.

இங்கு, 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக சில மாதங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராசிபுரம் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிது. போதமலையிலும் மழை பெய்து வருவதால், மலையில் இருந்து வரும் ஓடைகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் கெடமலையில் இருந்து, 2 டன் எடையுள்ள இரண்டு பாறைகள், 800 அடி உயரத்தில் இருந்து உருண்டு வந்து புதுப்பட்டி பகுதியில் உள்ள மலையடிவார பகுதியில் விழுந்துள்ளன. கற்கள் உருண்டு வந்ததால் அடிவார விவசாயிகள் சென்று பார்த்துள்ளனர். தொடர் மழை காரணமாக கெடமலையில் வனப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இரண்டு பாறைகளும் உருண்டு வந்தது தெரிந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us