sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு

/

இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு

இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு

இலங்கை தமிழர் முகாமில் திருமணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்து 200 வீடுகள் பாதிப்பு


ADDED : டிச 05, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்- திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கால், பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் தண்ணீர் புகுந்து, 200

வீடுகள் பாதிக்-கப்பட்டன. அங்கு வசித்தவர்களை பாதுகாப்பாக மீட்டு, பரமத்தி ஆண்கள்

மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திருமணிமுத்-தாற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டுள்ளது. இதனால், திருமணி முத்தாறு பாய்ந்தோடும் பகுதிகளான பரமத்தி வேலுார் தாலுகா-வுக்கு

உட்பட்ட கூடச்சேரி, ராமதேவம், பள்ளபாளையம், கோதுார், மேல்சாத்தனுார், பில்லுார், வேலகவுண்டம்பட்டி,

எலச்-சிபாளையம், பரமத்தி, ப.வேலுார் அருகே பொய்யேரி ஆகிய பகு-திகளில், பாலங்களை மூழ்கடித்தபடி

வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் வீண்

திருமணிமுத்தாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர்

புகுந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரை, வாழைப்பயிர்கள் சேதம-டைந்தன. மேலும், பரமத்தியில்

உள்ள இலங்கை தமிழர் முகாமில், 417 குடியிருப்புகள் உள்ளன. இதில், 1,283 பேர் வசிக்-கின்றனர். நேற்று காலை,

8:00 மணியளவில் இப்பகுதியில் திரும-ணிமுத்தாறு வெள்ளநீர் புகுந்தது. பதறிபோன குடியிருப்பு வாசிகள்,

வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்களை எடுப்ப-தற்குள், 200 வீடுகளில் தண்ணீர் புகுந்து மளிகை பொருட்கள்

வீணாகின. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, பரமத்தி வேலுார் தாசில்தார் முத்துக்குமார், பரமத்தி டவுன் பஞ்.,

செயல் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர், 220க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்-பாக மீட்டு, பரமத்தி அரசு

ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர்.

போலீசார் பாதுகாப்பு

மேலும், திருமணிமுத்தாறு செல்லும் பாதையில் உள்ள பாலங்-களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

பொதுமக்கள் கடந்து செல்லாமல் இருக்க இருபுறமும் தடுப்பு வழிகள் அமைத்து பாது-காப்பு பணியில் போலீசார்

ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், பரமத்தியில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், நேற்று காலையில்

திருமணிமுத்தாறு தண்ணீர் புகுந்தது. காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் செய்வ-தறியாது திகைத்தனர்.

தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறிய பிறகே பணிகள் தொடரும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.போக்குவரத்து துண்டிப்பு

பரமத்தி அருகே உள்ள பொய்யேரி திருமணிமுத்தாற்றில் ஏற்-பட்ட வெள்ளப்பெருக்கால் ஒழுகூர்பட்டி,

ஊஞ்சபாளையம் கிரா-மங்களுக்கு செல்லும் தார்ச்சாலைகள் தண்ணீரில் மூழ்கி போக்கு-வரத்து தடைபட்டது.

இதேபோல், பரமத்தி காந்தி நகரிலும், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், தாழ்வான பகு-தியில் இருப்பதால் திருமணிமுத்தாற்றில்

வெள்ளப்பெருக்கு ஏற்ப-டும்போதெல்லாம் குடியிருப்புகளில் தண்ணீர் புகுவது வாடிக்கை-யாக உள்ளது.






      Dinamalar
      Follow us