ADDED : செப் 15, 2026 07:06 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில்,
கடந்தாண்டு செப்., 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று, காந்திபுரம்
வடக்கு வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் வருடாந்திர விழா
நடைபெற உள்ளது. அதையொட்டி, நேற்று மாலை, 5:00 மணிக்கு வாணவேடிக்கை
மற்றும் மேளதாளம் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
காந்திபுரம்
மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த
ஊர்வலம், சேந்தமங்கலம் - ராசிபுரம் சாலை, அண்ணா நகர் பஸ் ஸ்டாப்
வழியாக கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம்
செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.
