/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாட்கோ மூலம் எஸ்.சி.,எஸ்.டி., இனத்தினருக்கு பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாட்கோ மூலம் எஸ்.சி.,எஸ்.டி., இனத்தினருக்கு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாட்கோ மூலம் எஸ்.சி.,எஸ்.டி., இனத்தினருக்கு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தாட்கோ மூலம் எஸ்.சி.,எஸ்.டி., இனத்தினருக்கு பயிற்சி
ADDED : ஜன 03, 2025 01:40 AM
நாமக்கல், ஜன. 3-
நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 மற்றும் குருப் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

