/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டி.என்.பி.எஸ்., தேர்வு: 920 பேர் 'ஆப்சென்ட்'
/
டி.என்.பி.எஸ்., தேர்வு: 920 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஆக 18, 2025 02:54 AM
நாமக்கல்:மாவட்டத்தில், ஒன்பது மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வில், 1,290 பேர் பங்கேற்-றனர். 920 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஒருங்கி-ணைந்த தொழில் நுட்ப பணிக்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது மையங்களில் தேர்வு நடந்தது. இதற்காக, காலை, 9:30 மணி முதல், மதியம், 12:45 மணி வரை, ஓ.எம்.ஆர்., மூலமும்; மதியம், 2:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, 'டிஸ்கி-ரிப்டிவ்' முறையிலும் என, மாவட்டம் முழுவதும் இருந்து, 2,210 பேர் விண்ணப்பித்திருந்தனர்.தேர்வை கண்காணிக்க, 9 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு பறக்கும் படை, இரண்டு நடமாடும் குழுக்கள், 9 ஆய்வு அலுவ-லர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். நேற்று நடந்த தேர்வில், மொத்தம், 1,290 பேர் பங்கேற்றனர். 920 பேர் கலந்து கொள்ள-வில்லை.