/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை பறிமுதல்வடமாநில நபர் கைது
/
புகையிலை பறிமுதல்வடமாநில நபர் கைது
ADDED : பிப் 18, 2025 12:55 AM
புகையிலை பறிமுதல்வடமாநில நபர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ.,க்கள் குணசேகரன், ராம்குமார், ஏட்டு சீனிவாசன் ஆகியோர், நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த, 'மாருதி சுவிப்ட்' கார் ஒன்று, டூவீலர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
அந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ஒரு லட்சத்து, 72,000 ரூபாய் மதிப்புள்ள, 266 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், பெட்டாலா பகுதியை சேர்ந்த ஹர்ஷன்குமார், 25, என்ற வாலிபரை கைது செய்தனர்.