sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

/

மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : மார் 20, 2024 02:06 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை:சீசன் தொடங்கி, 2வது வாரமாக மஞ்சள் விலை, 22,000 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. சீசன் தொடங்கிய பின் தொடர்ந்து, 2வது வாரமாக, நேற்று மஞ்சள் விற்பனை நடந்தது.

விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,269 ரூபாய்க்கும், அதிகபட்சம், 20,933 ரூபாய்க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சம், 11,859 ரூபாய்க்கும், அதிகபட்சம், 17,069 ரூபாய்க்கும் விற்பனையானது. பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 8,469 ரூபாய்க்கும், அதிகபட்சம், 17,069 ரூபாய்க்கும் விற்பனையானது. விரலி, 490, உருண்டை, 250, பனங்காலி, 100 என, 840 மூட்டை மஞ்சள், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல், தனியார் மண்டிகளில் மஞ்சள் விற்பனை நடந்தது. விரலி ரகம், 100 கிலோ மூட்டை அதிகபட்சம், 23,000 ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் தொடங்கி, இரண்டு வாரமாக மஞ்சள் விற்பனை, 22,000 ரூபாயை தாண்டி விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us