ADDED : ஜூலை 07, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுாரில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு
தகவல் கிடைத்தது. இதையடுத்து, ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில், எஸ்.ஐ., சீனிவாசன்  தலைமையில் போலீசார் சோதனையில் ஈடு-பட்டனர்.
அப்போது, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி, தில்லை நகரை சேர்ந்த துரைசாமி மகன் தீபன், 25, தங்கராஜ், 49, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு-களை  பறிமுதல் செய்து, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.

