/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
/
டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
ADDED : நவ 09, 2024 03:57 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சி, ஈஸ்வரமூர்த்திபாளை-யத்தை சேர்ந்தவர் குள்ளன் மகன் வெங்கடாஜலம், 35; லாரி டிரைவர். இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு, 'சுசூகி' டூவீலரில் ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் இருந்து மங்களபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
உடன், அதே பகுதியை சேர்ந்த நண்பர் வெங்க-டேசன், 30, வந்தார்.அப்போது, மங்களபுரத்தில் இருந்து ஆத்துார் நோக்கி, 'ஹீரோ' டூவீலரில் தருமன், 30, பூவரசன், 24, ஆகியோர் வந்து கொண்டி-ருந்தனர். வாழப்பாடி பிரிவு ரோடு அருகே வரும்போது, இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே வெங்கடாஜலம் உயிரிழந்தார். படுகாயம-டைந்த, 3 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்க்கப்பட்டனர். பின் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.