தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆவணமில்லாத ரூ.50,000 பறிமுதல்

ஆவணமில்லாத ரூ.50,000 பறிமுதல்

ஆவணமில்லாத ரூ.50,000 பறிமுதல்


ADDED : ஏப் 21, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லசமுத்திரம் ::மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி அருகே, கோணங்கிபாளையம் பிரிவு பகுதியில், நேற்று நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி கவுதம் தலைமையில், தலைமை காவலர் ஜனகராஜ் மற்றும் இரண்டு கர்நாடக போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நல்லாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா, 41, என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த, 50,000 ரூபாயை பறிமுதல் செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us