sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக மத்திய அமைச்சர் வாழ்த்து

/

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக மத்திய அமைச்சர் வாழ்த்து

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக மத்திய அமைச்சர் வாழ்த்து

'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று சிறந்த மருத்துவராக மத்திய அமைச்சர் வாழ்த்து


ADDED : மார் 31, 2025 03:00 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைசிறந்த மருத்துவராக வர-வேண்டும்' என, 'நீட்' இலவச பயிற்சி மைய துவக்க விழாவில், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மத்திய இணை அமைச்சர் முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் வகையில், இலவச பயிற்சி மையம், நாமக்கல்-மோ-கனுார் சாலையில் உள்ள ராமவிலாஸ் கார்டனில் நிறுவப்பட்டு, நேற்று துவக்க விழா நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சரவணன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். நிறுவன மேனேஜிங் டிரஸ்டி சக்திவேல், அறங்காவலர் காந்தி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மத்திய தகவல் -ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், டில்லியில் இருந்து மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாவது: ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும், எந்த தடங்களுமின்றி, 'நீட்' தேர்வை எழுத வேண்டும்; நன்கு பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இலவச, 'நீட்' பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இளைய சமுதா-யத்தை முன்னேற்ற, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்-படுத்தி வருகிறது. இந்த பயிற்சி முகாமை நன்கு பயன்படுத்தி, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, தலைசிறந்த மருத்துவராக வர-வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us