/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒரு ஏக்கரில் 18 குவிண்டால் பஞ்சு அறுவடை நாமக்கல் விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
/
ஒரு ஏக்கரில் 18 குவிண்டால் பஞ்சு அறுவடை நாமக்கல் விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ஒரு ஏக்கரில் 18 குவிண்டால் பஞ்சு அறுவடை நாமக்கல் விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ஒரு ஏக்கரில் 18 குவிண்டால் பஞ்சு அறுவடை நாமக்கல் விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ADDED : ஜூலை 13, 2025 01:25 AM
நாமக்கல் :பருத்திக்கான சிறப்பு முன்னோடி திட்டத்தில், ஒரு ஏக்கரில், 18 குவிண்டால் பஞ்சு அறுவடை செய்து சாதனை படைத்த நாமக்கல் விவசாயியை, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நாக்பூர் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், 'பருத்திக்கான சிறப்பு முன்னோடி திட்டம்' என்ற புதிய திட்டத்தை, இரண்டு ஆண்டு
களாக நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், அடர் நடவு முறை பருத்தி சாகுபடி மூலம், புதிய ரகங்களை அறிமுகம் செய்து, பருத்தியின் உற்பத்தியை பெருக்குவதாகும்.
அதன்படி, அடர் நடவு பருத்தி சாகுபடி, 71 ஏக்கர்; நீண்ட இழை பருத்தி சாகுபடி, 20 ஏக்கர் என, மொத்தம், 91 ஏக்கரில், 53 விவசாயிகள் பயனடையும் வகையில், நாமகிரிப்பேட்டை, சேந்த
மங்கலம், எருமப்பட்டி, மோகனுார் ஆகிய, நான்கு வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டது. இதில், நாமகிரிப்பேட்டை யூனியன், ஒடுவன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி துரைசாமி, ஒரு ஏக்கருக்கு, 18 குவிண்டால்(1,800 கிலோ) பஞ்சு அறுவடை செய்து, நல்ல மகசூலை ஈட்டி சாதனை படைத்தார்.
இதையடுத்து, கோவையில் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கான பங்குதாரர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது, ஒரு ஏக்கருக்கு, 18 குவிண்டால் பஞ்சு அறுவடை செய்து சாதனை படைத்த விவசாயி ராம
சாமியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அவருடன், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்
முருகன், உழவியல் துறை பேராசிரியர் அழகுதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'பருத்திக்கான சிறப்பு முன்னோடி திட்டம்' இந்தாண்டும் செயல்படுத்தப்படுகிறது. அதனால், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்' என, தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.