sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெறும் கையால் பக்தர் சுட்ட வடை ஆடிப்பூர விழாவில் ரூ.4,000க்கு ஏலம்

/

வெறும் கையால் பக்தர் சுட்ட வடை ஆடிப்பூர விழாவில் ரூ.4,000க்கு ஏலம்

வெறும் கையால் பக்தர் சுட்ட வடை ஆடிப்பூர விழாவில் ரூ.4,000க்கு ஏலம்

வெறும் கையால் பக்தர் சுட்ட வடை ஆடிப்பூர விழாவில் ரூ.4,000க்கு ஏலம்


ADDED : ஜூலை 29, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணமங்கலம், கண்ணமங்கலம் அருகே, துரிஞ்சிக்குப்பம் ஓம்சக்தி அம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் கொதிக்கும் எண்ணெய்யில், பக்தர் ஒருவர் வெறும் கையால் சுட்ட வடை, 4,000 ரூபாய்க்கு ஏலம் போனது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் கிராமத்திலுள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலில், 25ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை சக்தி ஹோமம், மஹா அபிஷேகம், மஞ்சள் குட சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து முதுகில் அலகு குத்தி அம்மன் தேர் இழுத்து வீதி உலா, 108 பால்குட ஊர்வலம் நடந்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மார்பில் உரல் வைத்து, உலக்கையில் மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையால் வடை எடுத்தல் நிகழ்வு நடந்தது. இந்த வடை, ஏலம் விடப்பட்டது. இதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால், பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததில், முதல் வடை, 4,000 ரூபாய், 2ம் வடை, 1,200 ரூபாய், 3ம் வடை, 1,000 ரூபாய் என ஏலம் போனது.






      Dinamalar
      Follow us