sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 3 நாள் டாஸ்மாக் கடைளுக்கு விடுமுறை

/

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 3 நாள் டாஸ்மாக் கடைளுக்கு விடுமுறை

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 3 நாள் டாஸ்மாக் கடைளுக்கு விடுமுறை

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா 3 நாள் டாஸ்மாக் கடைளுக்கு விடுமுறை


ADDED : ஜூலை 30, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'வல்வில் ஓரி விழா நடைபெறுவதை முன்னிட்டு, ஆக., 1 முதல், மூன்று நாட்களுக்கு, கொல்லிமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு சார்பில், கொல்லிமலையில் ஆக., 1 மற்றும் 2 என, இரண்டு நாட்கள் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கொல்லிமலை பகுதியில் செயல்பட்டு வரும், அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளை, ஆக., 1 முதல், 3 வரை, மூன்று நாட்கள் மூடிவைக்க வேண்டும்.

கொல்லிமலை பகுதியில் செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் சேந்தமங்கலம் தாலுகா காரவள்ளி ஆகிய, நான்கு டாஸ்மாக் மதுபான கடைகளையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கும் வகையில், ஆக., 1 முதல், 3ம் தேதி வரை முழுமையாக மூடவேண்டும். இந்த நாட்களில் கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us