sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

/

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.27.89 லட்சத்திற்கு காய்கறி விற்பனை


ADDED : ஜூன் 23, 2025 05:05 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 62 டன் காய்க-றிகள், 27.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து, இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்-றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்-கிழமைகளில் அதிக அளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்-களை வாங்கி செல்வது வழக்கம்.அதன்படி, நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியா-பாரம் நடந்தது. 202 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி-களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 48,190 கிலோ காய்கறிகள், 13,710 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 61,925 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்-டன. அவற்றை, 12,385 வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 27 லட்சத்து, 89,520 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us