ADDED : நவ 28, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன சோதனை
அபராதம ்விதிப்பு
குமாரபாளையம், நவ. 28-
குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர், சேலம் - கோவை புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில், நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, தலைக்கவசம் அணியாமல் டூவீலர் ஓட்டிய, 8 பேர், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய, 3 பேர், அதிக பாரம் ஏற்றிய லாரி, வரி செலுத்தாத பிற மாநில லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையாக, 43,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. பிற வாகனங்கள் மூலம் சாலை வரியாக, 7,090 ரூபாய், அபராத தொகையாக, 10,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.