ADDED : ஜன 23, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்துள்ள ஓலப்பாளையம், பல்லக்காபா-ளையம், தட்டாங்குட்டை, நேரு நகர்,கோட்டைமேடு, வெப்-படை, காந்திநகர், வாய்க்கால் மேடு, சின்னார் பாளையம், படை-வீடு, அம்மாசி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீடு, நிலம் இல்லாத, 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த விவசாய மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், வீட்டு மனை கேட்டு பலகட்ட போராட்டம் நடத்தினர். பல ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வழங்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மா. கம்யூ., கட்சி சார்பில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமதி தலைமை வகித்தார்.

