sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி

/

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பு;விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : மார் 15, 2024 02:44 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, 81 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த படுகை அணையின் இடது புறத்தில் ராஜா வாய்க்கால் தொடங்குகிறது. வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக கடந்த பிப்., 20ல், தண்ணீர் நிறுத்தப்பட்டது.

கடந்த, 23 நாட்களாக நடந்த பராமரிப்பு பணி நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் விவசாய பாசன வசதிக்காக ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பு விழாவில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுரேகா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ராஜா வாய்க்காலை நம்பி காவேரி கரையோர பகுதிகளான ஜேடர்பாளையம், பரமத்தி, பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், பொய்யேரி, நன்செய் இடையார் விவசாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை, தென்னை, மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர். ராஜா வாய்க்கால் மூலம், 16,150 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us