ADDED : செப் 04, 2024 09:30 AM
ராசிபுரம்: மேட்டூரில் இருந்து ராசிபுரம், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மற்றும் அப்பகு-தியில் உள்ள டவுன் பஞ்.,களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கும் பணி நடந்து வருகிறது. கிராமங்களில் குழாய் பதிக்கப்-பட்டு, மேல்நிலை தொட்டி வரை கொண்டு செல்-லப்பட்டுள்ளன.
தற்போது, ராசிபுரத்தில் இருந்து காக்காவேரி வழியாக பிரதான பைப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. ராசிபுரம் அடுத்த காக்காவேரியில் பிரதான பைப்புகள் அமைக்கும் பணியின் போது ஏற்கனவே உள்ள பைப்புகள் சேதமடைந்தன. நேற்று காக்காவேரி பகுதியில் சாலையோரம் ஏற்கனவே பதிக்கப்பட்ட பைப்-புகள் உடைந்து தண்ணீர் முழுதும் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கனவே குழி-தோண்டிய இடத்தில் சேரும், சகதியுமாக மாறி-யது. டூவீலரில் செல்பவர்கள் மிகவும் அவதிப்-பட்டனர்.