sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.3.83 லட்சத்தில் நலத்திட்டம்

/

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.3.83 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.3.83 லட்சத்தில் நலத்திட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.3.83 லட்சத்தில் நலத்திட்டம்


ADDED : அக் 28, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 360 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும்' என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், மூன்று பேருக்கு, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், ஆட்டோ மானியம், ஒருவருக்கு, 50,000 ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்வி நிதியுதவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், ஐந்து பேருக்கு, 32,500 ரூபாய் மதிப்பில் இலவச சலவை பெட்டி என, ஒன்பது பேருக்கு, 3.83 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் சுந்தரராஜன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் இந்தியா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us