sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

/

மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

மாரியம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா


ADDED : நவ 05, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம்-நாமக்கல் சாலையில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசியில் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்தாண்டு விழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. இதில், பூசாரி முன் வரிசையாக பக்தர்கள் நின்று சாட்டையடி வாங்கி சென்றனர். தொடர்ந்து கொடியேற்றம்

நடந்தது.

இதேபோல், ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானுரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 21ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல், உருளுதண்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையால், 3 அடி வாங்கி நேர்த்திக்கடன்

செலுத்தினர்.






      Dinamalar
      Follow us