sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை

/

பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை

பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை

பஸ்சில் பயணி தவறவிட்ட ரூ.30,000 எடுத்துச்சென்ற பெண்ணுக்கு வலை


ADDED : ஜூலை 07, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: நாமக்கல் மாவட்டம் மெட்டாலாவை சேர்ந்தவர் வேல்முருகன், 32. இவர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,யிடம், கார் டிரைவராக பணி-புரிகிறார்.

சொந்த ஊர் செல்ல, கடந்த ஜூன், 24 இரவு, 9:00 மணிக்கு, ராசி-புரத்தில் இருந்து தம்மம்பட்டிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சில் சென்றார். ஒரு பையில், இருசக்கர வாகன கடனுக்கு தவணை நிலுவை தொகை கட்ட, 30,000 ரூபாய் வைத்திருந்தார். மொபைல் போனில் பேசியபடி அவர், பஸ்சில் இருந்து இறங்கி-விட்டார். வீட்டுக்கு சென்றபோது, பணப்பையை பஸ்சில் மறந்து வைத்துவிட்டது தெரிந்தது.பின் சென்று, பஸ்சின், 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, அதே பஸ்சில் பயணித்த ஒரு பெண், அந்த பையை எடுத்துச்-சென்றது பதிவாகி இருந்தது. வேல்

முருகன் புகார்படி, தம்மம்பட்டி போலீசார், அந்த பெண்ணை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us