/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்
/
பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்
பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்
பாதுகாப்பற்ற படித்துறை குளிப்பதற்கு பெண்கள் அச்சம்
ADDED : பிப் 16, 2025 03:25 AM
பள்ளிப்பாளையம்: பெரியார் நகர் பகுதியில் காவிரி ஆற்றோரத்தில் பெண்கள் பயன்பாட்டிற்கு உள்ள படித்துறையில், பாதுகாப்பு வளையம் இல்லாததால் அச்சத்துடன் குளிக்கின்றனர்.
பள்ளிப்பாளையம் அடுத்த, பெரியார்நகர் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பெண்கள் துணி துவைக்கவும், குளிப்ப-தற்கும் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் சுற்று வட்டா-ரத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த படித்துறைக்கு குளிப்ப-தற்கும், துணி துவைப்பதற்கும் வருகின்றனர்.
தற்போது, படித்துறையை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆகாயத்தாமரை செடிகளும் படர்ந்துள்ளன.
இதனால், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் மிகவும் அவ-திப்படுகின்றனர். திறந்தவெளியாக உள்ளதால், படித்துறையை வீட்டு சற்று விலகினால், ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்லும் நிலை உள்ளதால், பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் விபரீதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே இந்த படித்துறையில் பெண்கள் பாதுகாப்பாக குளிக்-கவும், துணி துவைப்பதற்கும் பாதுகாப்பு வளையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

