/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
யுகாதி விழாவையொட்டி பெண்கள் விளக்கு பூஜை
/
யுகாதி விழாவையொட்டி பெண்கள் விளக்கு பூஜை
ADDED : மார் 31, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளி, பவுர்-ணமி, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜை, வழி-பாடு நடப்பது வழக்கம்.
நேற்று யுகாதியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரா-தனை காண்பிக்கப்பட்டது. மாலை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர்.