sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்

/

பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்

பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்

பள்ளிப்பாளையம் யூனியனில் ரூ 3.25 கோடியில் பணிகள் துவக்கம்


ADDED : ஜன 03, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், ஜன. 3-

பள்ளிப்பாளையம் யூனியனில், ரூ.3.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி துவக்கி வைத்தார்.

பள்ளிப்பாளையம் யூனியனில் காடச்சநல்லுார், பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி, எலந்தகுட்டை, பாதரை, சமயசங்கிலி, களியனுார், தட்டாங்குட்டை உள்ளிட்ட பஞ்., பகுதியில் மேல்நிலை நீர் தொட்டி, குடிநீர் குழாய் விரிவுபடுத்தல், வடிகால் அமைத்தல், கான்கிரீட் தளம், சுகாதார வளாகம், தடுப்பணை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சாலை வசதி உள்ளிட்ட ரூ.3.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும் முடிவுற்ற சுகாதார வளாகம், குடிநீ பணி, கூடுதல் பள்ளி வகுப்பறைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் செந்தில் மற்றும் பஞ்., தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us