ADDED : மே 18, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் காப்பர் ஒயரை திருடிய தொழிலாளியை, வெப்படை போலீசார் கைது செய்தனர்.
சேலம்
மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்தவர் நாகராஜ், 31; இவர்,
பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில்
வேலை செய்து வருகிறார். இந்த நுாற்பாலையில், 13 கிலோ காப்பர் ஒயரை
திருடியுள்ளார். புகார்படி, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு
செய்து, நாகராஜை கைது செய்தனர்.
