/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக புவி தின விழிப்புணர்வு பேரணி
/
உலக புவி தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 24, 2025 01:40 AM
நாமக்கல்:
நாமக்கல்லில் நடந்த, உலக புவி தின விழிப்புணர்வு பேரணியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
புவியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் வகையில், அனைத்து நாடுகளிலும், 'உலக புவி தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. 'பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை உலக மக்கள் உணர வேண்டும்' என, கேலார்ட் நெல்சன் என்ற அமெரிக்கர் கருதினார். இதையடுத்து, ஊர்வலம், பொதுக்கூட்டம், போன்றவற்றை மாணவர்களை கொண்டு நடத்தி வந்தார். 1970 ஏப்., 22ல், புவியை பாதுகாக்க, இரண்டு கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தினார். இதுவே, 'உலக புவி தினமாக' மாறி கடைப்
பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, உலக புவி தினத்தை சிறப்பித்து நினைவு கூறும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பசுமைப்படை சார்பில், உலக புவி தின விழிப்புணர்பு பேரணி, நேற்று முன்தினம் நடந்தது. தலைமையாசிரியர் சீனிவாச ராகவன் தலைமை வகித்தார்.
பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளியில் துவங்கிய பேரணி, மோகனுார் சாலை, பரமத்தி சாலை வழியாக சென்று ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் முடிந்தது. புவியின் பாதுகாப்பை பற்றியும், மரங்கள் நட்டு வளர்ப்பது குறித்தும், புவியினுடைய சுற்றுச்
சூழலை பாதுகாக்க பூமி மாசடைவதை தடுக்க வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'குறுங்காட்டை' மாணவர்கள் பார்வையிட்டனர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

