sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு

/

கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு

கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு

கார்த்திகை சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் வழிபாடு


ADDED : டிச 07, 2024 06:57 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கார்த்திகை வளர்பிறை சஷ்டியையொட்டி, நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, 10:30 மணிக்கு உற்சவர் பூஜை, சுப்ரமணியர் ஹோமம், 11:30 மணிக்கு பாலதண்டாயுத-பாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில், மகா

தீபாராதனை நடந்தது.

* நாமக்கல் - கடைவீதி, சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டா-யுதபாணி சுவாமி ராஜ அலங்காரத்திலும்; மோகனுார் -

நாமக்கல் சாலையில் உள்ள, காந்தமலை பாலசுப்ரமணியர், தங்க கவசத்-திலும்; நாமக்கல் - சேலம் பைபாஸ் சாலையில்

உள்ள தண்டாயு-தபாணி கோவிலில், ராஜ அலங்காரத்திலும்; நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி, கந்தகிரி

பழனியாண்டவர் கோவிலில், சுவாமி திருநீறு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கூலிப்பட்டி பழனியாண்டவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.* ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பாலமுருகன், பாண்ட-மங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், கபிலர்மலை

பாலசுப்-ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனுார் பச்சைமலை முருகன்,

அனிச்சம்பா-ளையம் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில்,

சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us