ADDED : மே 14, 2025 02:02 AM
நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தையில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. கடந்த வாரம், நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை என்பதால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று நடந்த ஏலத்தில், விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 10,769 ரூபாய், அதிகபட்சம், 15,899 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,675 ரூபாய், அதிகபட்சம், 13,069 ரூபாய்; பனங்காலி, 14,699 ரூபாயிலிருந்து, 29,389 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 1,005, உருண்டை, 477, பனங்காலி, 40 என, 1,522 மூட்டை மஞ்சள், 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.