ADDED : ஏப் 23, 2025 01:49 AM
நாமகிரிப்பேட்டை,:நாமகிரிப்பேட்டையில் நேற்று, 1.30 கோடி ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது.தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும், 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.
சீசன் தொடங்கிய முதல் வாரம், 179 மஞ்சள் மூட்டை, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சமாக, 7,002 ரூபாய், அதிகப்பட்சமாக, 16,429 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சமாக, 11,002 ரூபாய், அதிகபட்சமாக, 14,059 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்காலி, 8,469லிருந்து, 28,169 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 990 மூட்டை, உருண்டை, 420, பனங்காலி, 60 மூட்டை என, 1,470 மூட்டைகள், 1.30 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.