/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீசன் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1.75 கோடிக்கு மஞ்சள் ஏலம்
/
சீசன் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1.75 கோடிக்கு மஞ்சள் ஏலம்
சீசன் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1.75 கோடிக்கு மஞ்சள் ஏலம்
சீசன் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1.75 கோடிக்கு மஞ்சள் ஏலம்
ADDED : ஏப் 30, 2025 12:59 AM
நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் விற்பனை நடக்கிறது.
சீசன் தொடங்கிய முதல் வாரம், 179 மஞ்சள் மூட்டை, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 1.30 கோடி ரூபாய்க்கு விற்றது. நேற்று சீசன் தொடங்கிய பின், அதிகபட்சமாக, 1.75 கோடி ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,369 ரூபாய், அதிகபட்சம், 15,555 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 9,669 ரூபாய், அதிகபட்சம், 13,777 ரூபாய்; பனங்காலி, 6,899 ரூபாயிலிருந்து, 28,699 ரூபாய் வரை விற்பனையானது. 2,490 மூட்டை மஞ்சள், 1.75 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.